states

img

‘பசு’ அரசியலை மீண்டும் தொடங்கிய மத்தியப்பிரதேச பாஜக அரசு

பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம் மற்றும் தலித் மக்  களை ஒடுக்கும் முனைப்பில் மாட்டிறைச்சி விற்றதாகக் கூறியும், மாட்  டிறைச்சி உண்பதாகவும் கூறி அவர்களின்  வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து வரு வது தொடர்கிறது. பாஜக ஆளும் மத்தி யப்பிரதேச மாநிலத்தில் மாட்டிறைச்சி வியாபாரத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் 11 முஸ்லிம்களின் வீடுகள்  இடிக்கப்பட்டுள்ளன. 

மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் பசுவைக் கொன்று அதன்  உடல் உறுப்புகளை அருகில் உள்ள இந்து  கோவிலுக்குள் வீசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுதொடர்பாக 4 பேர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. மேலும் பழங்குடியினர் மற்றும் முஸ்லிம்  மக்கள் அதிகம் வாழும் பகுதியான மாண்ட்லாவில் இருந்துதான் மாட்டி றைச்சி கொண்டு வரப்பட்டதாகவும், சோதனை முடிவில் 11 பேரின் வீடுகளி லும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்து மாட்டிறைச்சி மீட்கப்பட்டதாகவும் ரத்லம் மாவட்ட எஸ்பி வெள்ளியன்று செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறினார்.

தொடர்ந்து சனியன்று மாட்டிறைச்சி  கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் 11 பேரின் வீடுகளும் புல்டோசர் மூலம் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. மேலும் அப்பகுதி யில் வளர்க்கப்பட்ட 150 பசுக்களையும் பறி முதல் செய்த போலீசார், 150 மாடுகளை  கால்நடை காப்பகத்தில் ஒப்படைத்துள்ள னர். கைப்பற்றப்பட்ட  பசுக்கள் அனைத்  தும் தொழில் சார்ந்து வளர்க்கப்பட்ட கறவை மாடுகள் என்று தகவல் வெளி யாகியுள்ளது. மக்களவை தேர்தல் கால மான கடந்த 4 மாதங்களாக பாஜக ஆளும்  மாநிலங்களில் பசுவதை தொடர்பான நட வடிக்கையை மேற்கொள்ளாமல் இருந்த நிலையில், மோடி மூன்றாவது முறை யாக பிரதமர் ஆனதும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் மூலம் பாஜக அரசு பசுவதை  வன்முறை மீண்டும் துவங்கப்பட்டுள் ளது.